கிருஷ்ணகிரி, ஜூலை 27 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கல்லாவி அம்பேத்கர் நகரில் ஆதி திராவிட மக்கள் 100 வீட்டில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு எந்தவித நிலமும் இல்லாததால் ஒரே வீட்டில் மூன்று குடும்பம் முதல் நான்கு குடும்பம் வரை வசித்து வருகின்றனர். இவர்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போது உள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இதனை கவனத்தில் எடுத்து எங்க பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாக மூன்று சென்ட் நிலம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களிடம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்து எங்களுடைய குடியிருப்பு உறுதி செய்ய வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



