சென்னை, பிப். 12 –
உடல் பருமன் மற்றும் சர்க்கரை (நீரிழிவு) நோய் அதிகரித்து வரும் நிலையில் இவைகளை எதிர்கொள்ள பிரத்யேகமாக சிறப்பு சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு ‘ரிவைவோ கிளினிக்’ (Revivo Clinic) சென்னையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த திறப்பு விழாவில் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
ரெவிவோ கிளினிக்கின் (Revivo Clinic) நிறுவனர் டாக்டர் அருண் ராகவன் ரெவிவோ கிளினிக்கின் நிறுவனர் மற்றும் குவாடின் (The Quad) இணை நிறுவனர் அரவிந்த் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரிவைவோ கிளினிக்கின் நிறுவனர் டாக்டர் அருண் ராகவன் இந்நிகழ்வில் பேசுகையில் கூறியதாவது: “உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கு மருந்து மாத்திரைகள் மட்டும் முழுமையான தீர்வை வழங்காது, நம் வாழ்க்கை முறையிலும் அர்த்தமுள்ள மாற்றங்கள் தேவை. ரிவைவோ கிளினிக்கில் அறிவியல் பூர்வமான, சான்றுகள் அடிப்படையிலான மருத்துவ சிகிச்சையோடு சரியான உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் நடத்தை சார்ந்த சிகிச்சைகளையும் நாங்கள்ஒருங்கிணைத்து நோயாளிகளுக்கு வழங்குகிறோம். நோயின் அறிகுறிகளை மட்டும் பார்க்காமல் அதற்கான மூலகாரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோம். ஒவ்வொரு நோயாளிக்கும் பிரத்யேக சிகிச்சை வழிமுறைகளை வடிவமைத்து, தற்காலிக தீர்வுகளை மட்டும் வழங்காமல், நிலையான ஆரோக்கியத்தை உறுதி செய்வதே எமது இலக்காகும்.
ரிவைவோகிளினிக் -ன் இணை நிறுவனர் அரவிந்த் அசோக் கூறியதாவது: “மருத்துவமனைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை ரிவைவோ நிரப்புகிறது. இந்த இரண்டும் வழங்க தவறுகின்ற தீர்வுகளை உடற்பருமனாலும், நீரிழிவாலும் அவதியுறும் நோயாளிகளுக்கு ரிவைவோ வழங்கும். நோயறிதலுக்கான பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் செயல்முறை ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இங்கு வழங்கப்படுகிறது. இதனால், நோயாளிகள்பல்வேறு இடங்களுக்கு அலையத் தேவையில்லை. வாழ்க்கை முறை மாற்றம் இல்லாத வெறும் மருத்துவ சிகிச்சை மட்டும் முழு பயனளிக்காது; அதேபோல மருத்துவரின் கண்காணிப்பு இல்லாத வாழ்க்கை முறை மாற்றமும் பாதியிலேயே நின்றுவிடும். இவை இரண்டையும் ஒருங்கிணைத்து, மக்கள் குழப்பமின்றி நிரந்தர ஆரோக்கியம் பெற ரிவைவோ கிளினிக்கில் நாங்கள் உதவுகிறோம்” என்றார்.



