தென்தாமரைகுளம், அக்டோபர் 17 –
அகஸ்தீஸ்வரம் சுசீந்திரம் சரகம் அரசு தொடக்கப் பள்ளியினை பொறியாளர் ஆய்வு செய்தனர். அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மாவட்ட திட்ட குழு உறுப்பினரும், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி 18 வது வார்டு உறுப்பினரான ஆதிலிங்க பெருமாள் மூலம் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி, பள்ளியில் மழைக் காலங்களில் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்குவதால் மாணவர்கள் மிகவும் சிரமத்தற்கு உள்ளாகின்றனர். ஆகவே மாணவர்கள் நலன் கருதி பள்ளி வளாகம் முழுவதும் தரை ஓடு போடவும், மழை காலங்களில் கட்டிடத்தின் சுவரில் மழைத் தண்ணீர் கசிகிறது. இதனால் கட்டிடம் பழுதடையும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆகவே பள்ளி கட்டிடத்தை பழுது நீக்கித் தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டது.
அதன்படி இன்று பள்ளி கட்டிடம் மற்றும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மதிய உணவு சமைக்கும் இடத்தையும் பொறியாளர் சுரேஷ் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். அவர்கள் பள்ளி கட்டிடம் மட்டும் மதிய உணவு சமைக்கும் அறையினையும் மதிப்பீடு செய்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் எனவும் கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.



