கிருஷ்ணகிரி, ஆக.19- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஞ்சூர் ஜெகதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் எம் எல் ஏ பிறந்தநாள் விழா மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ. சி. நாகராஜ் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு 500 பேருக்கு தென்னம் கன்றுகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளியில் உள்ள லைப்ரரிக்கு பாட நூல்கள் வழங்கப்பட்டது. மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ். பாலாஜி,பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், தலைமை ஆசிரியர் செந்தில்குமரன், பெற்றோர் சங்க செயலாளர் கண்ணையன், துணைத் தலைவர் வேலு, கவுன்சிலர் கார்த்திகேயன் மற்றும் சத்தியமூர்த்தி, வெங்கடேசன், பத்மநாதன், ஜெயவேல், ரமேஷ், சண்முகம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லட்சுமி பிரியா, தேவராஜன், சாம்ராஜ், சக்கரவர்த்தி, ஆசிரியர்கள் சுப்பிரமணி, கல்யாணசுந்தரம், பெருமாள், சிவராமன், அனுப்ரியா, விஜயலட்சுமி உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



