போகலூர், நவ. 26 –
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகில் சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்ததில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் சுற்றுலா முடித்து சென்னைக்கு டெம்போ டிராவலர் வேனில் வந்த போது ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த கார் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை உச்சிப் புளி நாகாச்சி அருகே இன்று (26.11.25) காலை 07.00 மணிக்கு நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த பைடி சாய் (23) மற்றும் நவீன் (22) ஆகியோர்கள் சம்பவ இடத்தில் இறந்தும் 4 பேர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும் டெம்போ டிராவலர் வேனில் வந்த 5 பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த 13 பேர் மீட்கப்பட்டு அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



