கோவை, அக். 24 –
உலக போலியோ தினத்தை முன்னிட்டு ரோட்டராக்ட் பொள்ளாச்சி கிரீன் பாரடைஸ் சங்கத்தின் சார்பில் சர்வதேச ரோட்டரி சங்கங்களின் போலியோ ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் போலியோ ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள ரோட்டரி படிப்பகம் முன்பு பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செய்யப்பட்டது. பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள ஆட்டோக்களில் ரோட்டரியின் END POLIO NOW என்ற திட்டத்தை பறைசாற்றும் பேனர்கள் ஒட்டப்பட்டது.
உலகில் தற்போது 2 நாடுகளில் மட்டுமே போலியோ நோய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போலியோ ஒழிபினை முழுமையாக நடைமுறைபடுத்த சர்வதேச ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டராக்ட் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இன்றளவும் செயல்படுத்தி வருகிறது.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி ரோட்டரி சங்க தலைவர் சதீஷ் சந்திரன், செயலாளர் மருத்துவர் ஸ்ரீகாந்த் வெங்கட், ரோட் டிரக் கிளப் ஆஃப் பொள்ளாச்சி கிரீன் பேரடைஸ் தலைவர் கௌதம், செயலாளர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



