விளாத்திகுளம், ஏப்ரல் 28 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள 2026-2027 ஆம் ஆண்டின் சொத்து வரியை வரும் ஏப்.30 ஆம் தேதிக்குள் செலுத்தி கட்டணத்தில் 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5000/-) சலுகை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதன் பின்பு அக்டோபர் மாதத்திற்கு முன்பு செலுத்துபவர்களுக்கு 2.5 சதவீதம் சலுகைகள் வழங்கப்படும். சொத்து வரி பணம் செலுத்துபவர்கள் இணையதளம் வழியாகவோ அல்லது பேரூராட்சி வரி வசூல் மையத்திலும் நேரடியாக சென்று செலுத்தலாம். இந்த சலுகையை விளாத்திகுளம் பேரூராட்சி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


