தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலைத் திருவிழா( 2024 2025) தலைமையாசிரியர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது. உதவி ஆசிரியர் மைதிலி மற்றும் ஆசிரியர்கள் அம்சவேணி, மணிமேகலை ,லதா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான நடன நிகழ்ச்சி, பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல், தேச பக்தி பாடல்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



