மார்த்தாண்டம், ஏப். 28 –
மார்த்தாண்டம் அருகே சாங்கை என்ற பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் அனீஸ் (22). பிரபல கல்லூரியில் பி.காம் 3 ம் ஆண்டு படித்து வந்தார். இவர் போதை பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து இருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ தினம் திடீரென வீட்டில் தூக்கு போட்டு உயிருக்காக போராடிய நிலையில் காணப்பட்டார். உறவினர்கள் அவரை மீட்டு சாமியார் மடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்தவர், தொடர்ந்து குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாற்றப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


