குலசேகரம், பிப்- 17
குலசேகரம் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பெருட்கள் விற்கப்படுவதாக குலசேகரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பல்வேறு கடைகளுக்கு சென்று சோதனை நடத்தினர்.
இதில் குலசேகரம் தும்பகோடு பகுதியை சேர்ந்த ஷைலா (70) என்பது கடையில் குட்கா விற்றது கண்டுபிடிக்கப்படடது.
இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர். இதை போன்று திருநந்திக்கரை அருகே வாடி வளாகத்தில் சுதா (51) என்பவரது கடையிலும் குட்கா பொருள்கள் விற்றது தெரியவந்து. அதையும் பறிமுதல் செய்து சுதாவை போலீசார் கைது செய்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.



