சுசீந்திரம், ஏப். 17 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தடுப்பு சுவர் ஒருபுறம் இருப்பு இருந்ததை சரி செய்வதற்காக ஒரு கோடியே 42 லட்ச ரூபாய் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்தப் பணியானது முடிவடைந்த நிலையில் குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் தண்ணீர் கொண்டு வருவதற்கு பழைய ஆற்றில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினாலும் சோழன் திட்டை அணையில் இருந்து மோட்டார் மூலம் பம்பிங் செய்து இரண்டு பெரிய மோட்டார் மூலம் அணையில் இருந்து தண்ணீர் தெப்பக்குளத்திற்கு கொண்டுவரும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தண்ணீர் வரும் பாதைகளில் ஆங்காங்கு அடைப்பு ஏற்பட்டுள்ளன. பின்பு ஜேசிபி இயந்திரம் மூலம் சுசீந்திரம் துவாரகா கிருஷ்ணன் கோவில் அருகே ஏற்பட்டுள்ள அடைப்பை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல சுசீந்திரம் பேரூராட்சிக்கு எதிரே உள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள அடைப்புகளையும் சரி செய்யும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. நாளை தெப்பத் திருவிழாவிற்கு காலை பத்து முப்பது மணி அளவில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 27 ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளதால் தண்ணீர் கொண்டு வரும் பணியானது வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.



