மார்த்தாண்டம், டிச. 6 –
கேரளா மாநிலம், நெய்யாற்றின் கரை, காஞ்சிரம்குளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகள் ரம்யா (22). நேற்று காலை மார்த்தாண்டத்தில் பணிக்கு வருவதற்காக அவரது அண்ணன் ரஞ்சித் குமார் என்பவருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பைக் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரி பகுதியில் போது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று பைக்கில் மோதியது.
இதில் ரஞ்சித் மற்றும், ரம்யா இருவரும் மேம்பாலத்தில் இருந்து 50 அடி கீழே உள்ள சாலையின் ஓரம் உள்ள ஒரு வீட்டு காம்பவுண்ட்க்குள் விழுந்தனர். இதில் அண்ணன் தங்கை ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியில் ரஞ்சித் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ரம்யா குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிட்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கும் சிறிது நேரத்தில் ரம்யாவும் உயிரிழந்தார். மேலும் விபத்துக்கு காரணமான கார் டிரைவர் மார்த்தாண்டம் பகுதி விபின் ஜோ என்பவரும் படுகாயமடைந்து அவரும் குமரி அரசு மருத்து கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மார்த்தாண்டம் போலீசார் இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் உடனடி தெரியவில்லை. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என எச்சரிக்கை பலகைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பைக், கார்களில் செல்லும் சிலர் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனவேதான் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதாக போலீசார் வேதனையுடன் தெரிவித்தனர்.



