தூத்துக்குடி, ஜூன் 26 –
தூத்துக்குடியில் “ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்” விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டைப் போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதை வலியுறுத்தி, தூத்துக்குடியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற “ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்” விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தைக் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்.
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. “தமிழ்நாட்டைப் போதை இல்லாத மாநிலமாக மாற்ற நாம் ஒன்றிணைவோம்” என்ற முக்கியக் கருப்பொருளை மையமாகக் கொண்டு இப்போட்டி ஒருங்கிணைக்கப்பட்டது. மாபெரும் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் முக்கியப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.



