கிருஷ்ணகிரி,மே.29-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஒன்றியம் மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகம் தொண்டரணி சார்பில் வெற்றிக் கழகம் தலைவர் விஜய் , ஆணைக்கிணங்க, மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்தன் வழிகாட்டுதலின்படி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 500 பேருக்கு மதிய உணவு வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட தொண்டர் அணி தலைவர் முரளி தலைமையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இணை செயலாளர் சுகுமார் முன்னிலையில், மத்தூர் ஒன்றிய பொருளாளர் விஜய்எழில் குமார், துணைத் தலைவர் குமார், ஒன்றிய இணை செயலாளர் சாரதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சூர்யா, ரமேஷ், ஹரி, பிரசாத், மணிகண்டன், உள்பட நகரம் கழகம் இர்பான் கிளை நிர்வாகிகள் விக்னேஷ், பாபு, சபரி, சுகுமார், சபரிநாதன், ராஜா, திருப்பதி, சதீஷ்குமார், சரத்குமார், மெர்சல்மணி, ராஜ்குமார் மற்றும் கிளை பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.



