நாகர்கோவில், நவ. 3 –
திங்கள்நகர் பேரூராட்சிக்குட்பட்ட பாசிகுளத்தான்கரை பகுதியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: திங்கள்நகர் பேரூராட்சிக்குட்பட்ட பாசிகுளத்தான்கரை பகுதியில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறன் பயனாளிகளின் அவர்தம் இல்லங்களுக்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்வதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பயனாளிகளை நேரில் சந்தித்து திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும் மின்னணு எடைத்தராசு, இ பாஸ் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாக எடுத்து சென்று தகுதியுள்ள பயனாளர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்கப்பட்டு வருகிறது என கூறினார்.



