சுசீந்திரம், ஏப். 18 –
மணிக்கட்டி பொட்டல் பகுதியில் வயது முதிர்ந்த தாயால் பராமரிக்க இயலாத நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்க, பொதுமக்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான நிமிர் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர்.
நிமிர் குழு, நாம் ஒருவர் அறக்கட்டளை, அவர் பவுண்டேஷன் இணைந்து அப்பெண்ணை மீட்டனர்.
மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணிற்கு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் பத்து நாட்கள் சிகிச்சையும் வழங்கப்பட்டது. பின்னர் அப்பெண்ணை பால்குளம் பகுதியில் அமைந்துள்ள அசிசி பெண்கள் மனநல மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.
கைவிடப்பட்ட நிலையில் இருந்த அந்த பெண்ணிற்கு நிலையான பாதுகாப்பை ஏற்படுத்திக்கொடுத்த நிமிர் குழுவுக்கும், அவர் பவுண்டேஷனுக்கும், அசிசி பெண்கள் மனநல மறுவாழ்வு மையத்திற்கும், நாம் ஒருவர் அறக்கட்டளைக்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.



