தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய நுழைவு வாயில் அமைத்து தர வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய நுழைவு வாயில் அமைக்க ராஜா எம்எல்ஏ ரூபாய் 7 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். தற்போது நுழைவாயில் அமைக்கும் பணிகள் நிறைவேற்று அது பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய நுழைவு வாயிலை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட பொருளாளர் சரவணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர் முத்துக்குமார் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் வாழைக்காய் துரை பாண்டியன் உள்பட மாவட்ட ஒன்றிய நகர வார்டு கிளை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



