கன்னியாகுமரி, ஜன. 16 –
கன்னியாகுமரி அருகே மந்திரம்புதூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் மகன் சேது (22). பைனான்ஸ் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினம் பணம் வசூலிப்பதற்காக அழகப்பபுரம் நவமணி சாலையில் உள்ள அந்தோணி கிப்சன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் வாங்கிய பைக்கிற்கான கடனை நான்கு மாதங்களாக கட்டாததால் பணத்தை உடனே கட்ட கூறி உள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபத்தில் உச்சத்திற்கு சென்ற அந்தோணி கிப்சன் அவரது நண்பர்கள் ஆன பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்த பைக் ஒர்க்ஷாப் வைத்துள்ள செல்வ பாஸ்கர் (27), கல்தொழில் செய்யும் முஜிப் ரஹ்மான் (22) ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்று சேதுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சேதுவை தகாத வார்த்தைகள் திட்டி அவரது பைக்கை அடித்து உடைத்துள்ளனர். இதை தட்டி கேட்ட சேதுவின் தாயையும் அசிங்கமாக திட்டி உள்ளனர்.
இதனால் மனமுடைந்த சேது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி ஜிப்சன், செல்வ பாஸ்கர், முஜீப் ரஹ்மான் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


