மார்த்தாண்டம், மார்ச் 2 –
மார்த்தாண்டம் அருகே காரவிளை பகுதியை சேர்ந்த 48 வயது தொழிலாளிக்கு ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பி ஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலையில் மாணவி கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மார்த்தாண்டம், பல்லன் விளை ரயில்வே மேம்பாலம் அருகே நடந்து சென்ற போது, எதிரே பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் மாணவியை நெருங்கி கைகளால் தாக்கியதுடன், தலை முடியை பிடித்து இழுத்து உள்ளார்.
மேலும் அவரது ஆடையை பிடித்து கிழித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்று விட்டார். இதில் காயமடைந்த மாணவி அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த மாணவியின் தந்தை மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.


