தஞ்சாவூர், ஜூன் 5 –
தஞ்சாவூர் அடுத்துள்ள ஒரத்த நாட்டில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கடை மூலமாக உணவு பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஒரத்தநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் புத்தூர் ரேஷன் கடையில் கலெக்டர் ரேவதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கடையில் உள்ள உணவுப் பொருட்களின் இருப்பு குறித்தும், உணவு பொருள்களின் வினியோகம் குறித்தும், உணவு பொருளில் தரம் குறித்தும் ஆய்வு செய்து, நியாய விலை கடையில் மூலமாக உணவுப்பொருட்கள் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் விற்பனை முனைய கருவி மூலம் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்தும், அக்கருவி ப்ளூடூத் இணைப்பின் மூலம் எடை கருவியுடன் இணைத்து சரியான எடை அளவுகள் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வாடிக்கையாளர் விவரம் அறிதல், திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணுடன் கைரேகை மூலம் வாடிக்கையாளர்களிடம் விவரங்கள் விற்பனை முனைய கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.



