நாகர்கோவில், ஜுலை 10 –
முதலமைச்சர் விஜய் ஒரு நாள் அரசு பயணமாக கரூருக்கு சென்றார். அங்கு ரோடுஷோவிலும், பொதுக்கூட்டம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு அரசு நியமன ஆணை, புதிய தொழில் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வை குறித்து அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கூறியதாவது: கரூரில் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துக் கொண்டாலும், முதல் நிகழ்ச்சியிலே கருப்பு உடையில் கலந்துக் கொண்டது என்பது ஆச்சரியமான விஷயம் தான். கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கருப்பு நிற உடையை அணிந்துள்ளார்.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போனவர்களில் 32 பேருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை, மற்றும் ஒருவருக்கு பணமுடிப்பு வழங்கியுள்ளார். இது போன்று தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கட்சி தலைவரும் செய்ததில்லை. மேலும் இறந்து போன தவெக தொண்டர்களின் நினைவாக கரூரில் நினைவு தூண் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் அரசியல், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறது.
முதலமைச்சர் என்கிற எந்த அலட்டலும் இல்லாமல், மக்கள் மத்தியில் புத்வேகத்துடன் எளிமையாக பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். அவர் மக்கள் மத்தியில் ரீல் தலைவர் இல்லை, ரியல் தலைவர் என்பதை நிருபித்து காட்டி விட்டார். மேலும் இடைத் தேர்தலிலும் தவெக வேட்பாளருக்கு வாக்கையும் கேட்டுள்ளார். நிச்சயம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெரும் வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது. இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.



