நாகர்கோவில், ஏப்ரல் 20 –
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே உருவாக்கும் என்றும், அதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும் என்றும் அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் தனிப்பட்ட மாஸ் மற்றும் மகளிர் உதவி தொகை, மகளிர் இலவச பேருந்து போன்ற பல திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்ததின் அடிப்படையில் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியே மலரக் கூடிய வாய்ப்புள்ளது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறக் கூடிய நிலை உள்ளது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திமுக வுக்கு இழுபறியாக இருக்கும் என்கிறார்கள். அது தவறான பார்வை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என்று தனிப்பட்ட மாஸ் எதுவும் கன்னியாகுமரி தொகுதிக்குள் இல்லை என்பதால் கடைசி தருவாயில் திமுகவே கன்னியாகுமரியில் வெல்ல கூடிய நிலை உள்ளது. இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.



