திருச்சி, ஜுன் 5 –
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர். துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், பத்திரப்பதிவு பணிகளுக்காக நிலத் தரகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் அளவுக்கு அதிகமாக லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.



