புதுக்கடை, பிப். 17 –
புதுக்கடை பகுதியில் சொத்து பிரச்சனை சம்மந்தமான 2 வழக்குள் கோர்ட் உத்தரவுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் ஜோஸ் (30). இவருக்கு இனயம் புத்தன்துறை கிராமத்திற்குட்பட்ட பகுதியில் சொத்து உள்ளது. இந்த நிலத்தின் பாதை சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த பால் ஸ்டீபன் (45) என்பவருடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 22-ம் தேதி ஆல்வின் ஜோஸ் பணியாளர்கள் மூலம் காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளார். அப்போது பால ஸ்டீபன் தலைமையில் ஜெய்சன் (18), புனிதா (40), வசந்தா ( 50) உள்ளிட்ட 8 பேர் கும்பல் சென்று காம்பவுண்ட் சுவரை இடித்து சேதப்படுத்தி, ஆல்வின் ஜோசுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆல்வின் ஜோஸ் குழித்துறை நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் உத்தரவின் பேரில் நேற்று 16-ம் தேதி புதுக்கடை போலீசார் பால் ஸ்டீபன் உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது போன்று தேங்காய் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண் (30) என்பவருக்கும் சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 22.6.2025 அன்று அருண், சிங் (35), செல்வராஜ் (60) ஆகியோர் சேர்ந்து அனிசை அவரின் நிலத்தில் அத்துமீறி நுழைந்து அரிவாளால் வெட்டியும், அவரது தாயாரையும் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இது குறித்தும் புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்காததால் குழித்துறை நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் புதுக்கடை போலீசார் நேற்று அருண், சிங், செல்வராஜ் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


