மார்த்தாண்டம், செப். 27-
மேல்பாலை அடுத்த குட்டைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பாபுராஜ் மகன் பெஜான் சிங் (25). நெட்வொர்க்கிங் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. கடந்த 24ஆம் தேதி உணவு அருந்திவிட்டு கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு வந்து பெஜான் சிங் கட்டில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பெஜான்சின் நேற்று மாலையில் உயிரிழந்தார். பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


