திருச்சி, மே 1 –
தொட்டியம் அருகே மாராட்சிபட்டியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கார்த்திகைப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொட்டியம் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



