ஈரோடு, பிப். 25 –
ஈரோடு டெக்ஸ்வெலியில் ரூ. 50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்த டைட்டீல் பார்க்கில் பிரமாண்டமான பார்ச்சூன் சிட்டி சர்வதேச தரத்தில் சகல வசதிகளுடன் ஷாப்பிங் சிட்டி என்ற ஷாப்பிங் சந்தை அமைய உள்ளது. இந்த ஷாப்பிங் சந்தையில் பல முன்னணி பிராண்டுகளின் அவுட் லெட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகள், முன்னணி உணவகங்களின் ரெஸ்டாரன்ட்கள், புட் கோர்ட்டுகள், ஒரே நேரத்தில் 120 கார்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி, திரையரங்குகள், குழந்தைகள் விளையாடுவதற்கு மெகா கேம் ஜோன், பங்ஷன் ஹால், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் முன்னணி ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் கட்டும் குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளன.
துபாய் சிங்கப்பூர் போன்ற மேலை நாடுகளுக்கு இணையாக அமைய உள்ள இந்த பார்ச்சூன் சிட்டி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். இத்தகவலை டெக்ஸ்வேலி சேர்மன் லோட்டஸ் பெரிய சாமி, துணைத்தலைவர் தேவராஜன், நிர்வாக இயக்குநர் குமார் மற்றும் இணை இயக்குநர் ரவி ஆகியோர் கூறினர்.



