தென்காசி, ஜூன் 12 –
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன் கூட்டியே தடுத்து நிறுத்துகின்ற வகையில் சிங்கப்பெண் அதிரடி படை தமிழக முதல்வர் ஜோசப் விஜயால் தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் பெண்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை முன்பாக கண்காணிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பழைய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் மாணிக்க செல்வி, பெண்களிடம் பேசுகையில்: தங்கள் பகுதிகளில் நடைபெறும் குழந்தை திருமணம் மற்றும் பெண்களுக்கு எதிரான அநீதிகள், பாலியல் சீண்டல்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக கேலி கிண்டல்கள் உள்ளிட்டவைகள் குறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பெண்கள் புகார் தெரிவிக்க தயங்கி நிற்க வேண்டாம் எனவும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 100, 1091 ஆகிய பெண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்டத்திலும் சிங்கப்பெண் அதிரடி படை அதிரடியாக உள்ள நிலையில் பெண்கள் தைரியமாக சுதந்திரமாக இருக்கலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



