தென்காசி, மார்ச் 18 –
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க தவறிய திமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் அஇஅதிமுக தலைமையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, வயது வரம்பின்றி புழக்கத்தில் உள்ள போதை பொருள் புழக்கம் என பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினால் பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தை மீட்டெடுக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேபோல் தென்காசி மாவட்டத்தில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு திமுக விடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் வகையில் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, பா.ஜ.க, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா, தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி நகர அதிமுக செயலாளர் சுடலை, பா.ம.க தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன், மாநில துணைத் தலைவர் சேது அரிகரன், மாவட்டத் தலைவர் குலாம், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் சண்முகையா பாண்டியன், செங்கோட்டை நகரச் செயலாளர் சுப்பையா பாண்டியன், அச்சன்புதூர் பேரூர் தலைவர் மைதீன் பிச்சை, அச்சன்புதூர் பேரூர் செயலாளர் அப்துல் மஜீத், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மேல நீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமுத்து, ஒன்றிய துணைச் செயலாளர் சமுத்திரம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மகளிர் அணி செயலாளர் திருமலை வடிவு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குமாந்தாபுரம் முருகன், கடையநல்லூர் நகர செயலாளர் சங்கர், கடையநல்லூர் நகர தலைவர் சாஸ்தா, செங்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, செங்கோட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் சீவ நல்லூர் இசக்கி முத்து உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.கவின் 5 ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து பேசிய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி பேசும் போது தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மாணவியின் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் போது பிரதமர் மோடி ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தி நாட்டை பாதுகாத்தாரோ அதே போல் தமிழகத்திலும் ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தி தமிழகத்தை பாதுகாப்போம் என்று பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை கற்பழிப்பு போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



