இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மகாத்மா காந்தி பொறுப்பேற்று 100 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பழனி நாடார் தலைமையில் தென்காசி மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகே உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் ,பொதுச் செயலாளர் சந்தோஷ் ,துணைத் தலைவர் சித்திக், நகர பொருளாளர் ஈஸ்வரன் ,நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பூமாதேவி ,வட்டார தலைவர்கள் பெருமாள் ,கதிரவன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்



