திருச்சி, ஏப். 29 –
துறையூர் அருகே கிழக்குவாடி பகுதியில் சிதம்பரத்திலிருந்து கோவை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 21 பயணிகள் லேசான காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த துறையூர் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.


