திருப்பூர், ஜூன் 01 –
இந்து மக்கள் அரசியலில் புறக்கணிக்கப்படுகிறார்கள். நடிகராக இருந்த போது விஜய் என்றவர் இப்போது ஜோசப் விஜய் என்கிறார். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. அதே போல் இந்து மத தொன்மையை பாதுகாக்க வேண்டும்.
மும்மொழி கொள்கை கண்டிப்பாக வேண்டும். வசதி படைத்தவர்கள் பணம் செலுத்தி பல மொழிகள் படிக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு மொழி தான் படிக்க வேண்டும் என்பது பராபட்சமானது. மோடியின் ஆளுமையால் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. பெரும் சித்தாந்தம் உருவாகி உள்ளது. இந்துக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் மும்மொழி கற்க வேண்டும் என்கிறார்.
வடமாநிலம் சென்றால் இந்தி தெரியாமல் அவதி அடைவதாக உள்ளது. இந்தி வேண்டாம் என்பவர்கள் எப்படியோ நாசமா போங்க எனக்கு கவலை இல்லை. இஸ்லாமிய, கிருஸ்தவ வழிபாட்டு தலங்கள் அவர்களிடமே உள்ளது. ஆனால் இந்து கோவில்களுக்கு மட்டும் அறநிலையத்துறை உள்ளது.
கடந்த ஆட்சியில் செய்த தவறுகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும். அனைத்து இந்து மக்களும் நமக்கு நல்லது செய்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இந்து முன்னேற்றக் கழகம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் துவக்குகிறோம். அர்ச்சகர்களுக்கு முறையான ஊதியம் கொடுத்தால் அவர்கள் பணம் பெற மாட்டார்கள். இந்த அரசு பச்சை குழந்தை சட்ட ஒழுங்கை பாதுகாக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். தயார் வீட்டு பிள்ளை வைத்தே வளர்த்தால் அந்த வீடு வளராது.



