நாகர்கோவில், மே 13 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசு மூலம் சிறந்த சாதனையாளர் நலனுக்கான பத்ம விருதுகள்- பத்மவிபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தின நாட்களில் வழங்கப்படுகிறது.
தற்போது 2026-2027 ஆம் ஆண்டுக்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நலத்தொண்டு, குடிமைசேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள், தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் சிறந்த சாதனை படைத்த சாதனையாளர்களிடமிருந்து பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் இணையதள (https://awards.gov.in) வாயிலாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அதன் விபரத்தினை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாக இணைப்பு கட்டிடம், நாகர்கோவில் என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. 30.06.2026 தேதிக்கு பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.



