திருச்சி, மார்ச் 19 –
திருச்சி மணப்பாறை அருகே நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான வெள்ளத்துரை, பாலப்பட்டி கேஸ் கம்பெனியில் இரவு நேர காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு 11 மணியளவில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வையம்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



