திருச்சி, மே 9 –
திருச்சி பிஎச்இஎல் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும் வையம்பட்டியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நிவேதாவை 5 லட்சம் ரூபாய் மற்றும் 50 சவரன் நகை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், தாக்கி காயப்படுத்தியதாகவும் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் சிலம்பரசன், அவரது தாய், தந்தை உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


