தருமபுரி, செப்டம்பர் 23 –
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், உடலின் உள் உறுப்புகள் மற்றும் திசுக்களின் மிகத் துல்லியமான, விரிவான படங்களை உருவாக்க உதவும் அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு தருமபுரி மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும். முன்பு பெருநகரங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்த நிலையில், இப்போது மாவட்டத்திலேயே உலகத் தரத்திலான சிகிச்சை வசதி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரன், உள்ளிருப்பு மருத்துவர் நாகேந்திரன், குழந்தை பிரிவு மருத்துவர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் இணைந்து கலந்து கொண்டு, ஆட்சித்தலைவருக்கு விரிவான விளக்கங்களை வழங்கினார்கள்.



