திருச்சி, மே 9 –
திருச்சி அரியமங்கலம் ரயில்வே தண்டவாளப்பாதை அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



