சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தற்காப்பு கலை பயிற்சி பெற்ற பெண் குழந்தைகளுக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கினார்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பாக “பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் தற்காப்பு கலை பயிற்சிகள் அளிப்பதற்காக தூத்துக்குடி நகரம், கோவில்பட்டி, மணியாச்சி மற்றும் விளாத்திகுளம் ஆகிய உட்கோட்ட பகுதிகளில் மொத்தம் 4 அரசு மாணவியர் தங்கும் விடுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு தங்கியுள்ள 180 மாணவிகளுக்கு கராத்தே அடிப்படை பயிற்சி கடந்த 20.02.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்படி பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட தற்காப்பு கலை பயிற்சியின் நிறைவு விழா நேற்று மணியாச்சி உட்கோட்டத்தில் சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் .கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு, மணியாச்சி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர். அருள்,சமூக நலத்துறை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ,ஜி.கே.நிவேதிதா, எம்.கே.என்.நிர்வாக கண்காணிப்பாளர் மற்றும் முன்னாள் சில்லாங்குளம் ஊராட்சி மன்ற த்தலைவர்.சி.சரோஜா கருப்பசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர் .கே.பாலமுருகன், முத்துக்கருப்பன் பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர் ஆர்.நிர்மலா பாலமுருகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் , மாணவிகள் நடனம் , தற்காப்பு கலை நிகழ்ச்சிகள், பி.விஜயலட்சுமி ஆசிரியர் சொற்பொழிவு ஆற்றினார், விழிப்புணர்வு பாடல் ஆசிரியர் சுப்பையா, மேலும் ரிக்கா, காவியலட்சுமி ஆகியோர். விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள்
தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழாவில் பயிற்சி நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர் இறுதியாக கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா அவர்கள் நன்றிஉரையாற்றினார்



