திருச்சி, ஏப்ரல் 25 –
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்குமேடு பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர், வியாழன் மேடு மதுக்கடை பாரில் பணிபுரிந்து வந்தார். கடந்த 20ஆம் தேதி, மது அருந்த வந்த செல்வகுமார் என்பவர் சிற்றுண்டி விநியோகம் தொடர்பாக சிக்கந்தரை அரிவாளால் தாக்கியதில் காயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே சிக்கந்தர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோமரசம்பேட்டை போலீசார், செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


