திருச்சி, ஏப்ரல் 28 –
திருச்சி ஏர்போர்ட் பாரதிநகர் பகுதியில் நள்ளிரவில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடும்பத்தினர் பாம்பை வெளியேற்ற முயன்றும் முடியவில்லை. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மூன்று அடி நீளமுள்ள பாம்பை லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.



