ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகஸ்ட் 20 –
விருதுநகர் மாவட்டம் சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து போதைப் பொருட்கள் உபயோகத்தில் ஆபத்துகள் தொடர்பான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த விழாவில் எம். அகிலா தேவி, செயலாளர்/முதன்மை துணை நீதிபதி, டிஎல்எஸ்ஏ. தலைமை உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தொடக்க உரை வழங்கினார். துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன் வாழ்த்துரை வழங்கினார். பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் அனைவரையும் வரவேற்பு செய்தார். அருப்புக்கோட்டை, மாவட்ட மன நல திட்டம், உளவியலாளர், எம். இளையராஜா, விருதுநகர், மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு, டிஎஸ்பி, ஏ.பி. சண்முக சுந்தரம் ஆகியோர் போதைப் பொருட்கள், அதற்கு அடிமையாதல், பயன்படுத்துவதால் தனக்கும் குடும்பத்திற்கும் மற்றும் முழு சமூகத்திற்கும் ஏற்படும் ஆபத்துகள் குறித்துப் பேசினர்.
நிகழ்வில் கிருஷ்ணன் கோவில் காவல் ஆய்வாளர் எம். தேவமாதா மற்றும் மாணவர் நல இயக்குநர் முனைவர் எம். பால கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.



