களியக்காவிளை, நவ, 18 –
செங்கல் சிவ பார்வதி கோயிலில் கோடி அர்ச்சனை துவங்கியது.
உலக சாதனையுடன் உலகின் மிக உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தென் கைலாசம் மகேஸ்வரம் ஸ்ரீ சிவ பார்வதி ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி தலைமையில் கோடி அர்ச்சனை துவங்கியது.. காலை 8.00 மணிக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து கோவில் நடை திறக்கப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டு, கோடி அர்ச்சனை துவங்கியது. தொடர்ந்து பௌர்ணமி சேவை, சுதர்சன ஹோமம் நடந்தது.
உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் அமைந்துள்ள தென் கைலாசத்தில் உள்ள மகேஸ்வரம் சிவன் பார்வதி கோவிலில் இருபத்தி மூன்றாவது கோடி அர்ச்சனை துவங்கப்பட்டுள்ளது. இது உலக சாதனைக ஆகும். தினமும் காலை கோவில் நடை திறக்கப்பட்டு, மகாகணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பின், கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி, திருவிளக்கு ஏற்றி கோவிலை திறந்து வைத்தார். விருச்சிக ராசிக்கு முதல் நாள் தொடங்கி, சிவராத்திரி விழா வரை, காலை, மாலை என, கோடிக்கணக்கான முறை அர்ச்சனை செய்யப்படுகிறது. கோடி அர்ச்சனை துவக்க விழா நிகழ்ச்சியில் மேல்சாந்தி குமார், கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.



