கோவை, மே 6 –
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய நிலையில் கோவை மாவட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை கோபாலபுரத்தில் உள்ள காமராஜர் பவன் காங்கிரஸ் அலுவலகம் முன்பு உற்சாகமாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். மேலும் தமிழகம் வெற்றிக் கழகத்துடன் இணைந்ததற்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் காமராஜர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையப் போவதாகவும் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், பாசமலர் சண்முகம், கனி லோகேஷ், ராஜமாணிக்கம், கே.என்.ஆர் ஆறுமுகம், நாராயணன், ஆபீஸ் ரமேஷ் ஹர்ஷா, பிபி சிவா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



