கிருஷ்ணகிரி, மார்ச் 12 –
ஈராக், அமெரிக்கா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்தம் காரணமாக
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு வணிக சிலிண்டர் மற்றும் வீடுகள் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களுக்கான
விலையையும் அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை ஓரக்கடைகள் மட்டுமின்றி ஹோட்டல்கள் சிலிண்டர்களின் தட்டுப்பாட்டினால் மூடப்பட்டு வருகிறது.
மேலும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர்களும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக சிலிண்டர்கள் புங்கிங் செய்ய முடியாததால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய காலி சிலிண்டர்களுடன் சமையல் எரிவாயு அலுவலகங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இது குறித்து கூறிய இல்லத்தரசிகள் ஏற்கனவே விலைவாசி உயர்வினால் எழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்தத்தினை காரணம் காட்டி எரிவாயு மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தக்கூடிய எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்திலும் எரிவாயு நிலையம் கிடைப்பது பெரும் சிறப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக சமையலுக்கு தேவையான சிலிண்டர்களை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.



