மண்டபம், நவ. 29 –
மண்டபத்தில் கடல் சீற்றம். ஆறடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பிய நிலையில் ஆபத்தை உணராமல் பார்வையிட்ட சிறுவர்கள். கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதம்.
டிட்வா புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் வழக்கத்திற்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து வீசி வரும் சூறைக்காற்று காரணமாக மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி விசைப்படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்டபம் வடக்கு கடல் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் கடல் அலைகள் இந்திய கடலோர காவல் படை முகாமின் சுற்றுச்சுவர் மீது மோதிராட்சத அலைகளாக எழுந்து வருகிறது.
தொடர்ந்து வீசி வரும் கூறைக்காற்று காரணமாக மீனவர்களின் படகுகள் மீன் பிடி துறைமுகத்தின் மீது மோதி படகு சேதம் அடைந்து வருவதால் அந்த படகை காற்று மற்றும் கனமழையும் பொருட்படுத்தாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு காற்றின் வேகத்தாலும் கடல் அலைகளின் சீற்றத்தாலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு கரையில் சாய்ந்தது. கடலோர காவல் படை முகாம் சுவரில் கடல் நீர் சுமார் 6 அடி உயரத்திற்கு எழும்பி மோதிய நிலையில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் பார்வையிட்டனர்.
மேலும் மண்டபம் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிப்போம் முகப்பு விளக்கு எரிய விட்டவாறு சென்று வாகனங்களை இயக்கி வருவதுடன் தொடர் கனமழை காரணமாக மண்டபம், வேதாளை, மண்டபம் அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.



