ஈரோடு, ஜூன் 15 –
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், கூல் லிப், ஹான்ஸ் போன்ற புகையிலைப்பொருட்களை, காவல்துறையினர், உணவு பாதுகாப்பு துறையினர், உள்ளாட்சித்துறையினர், சுகாதாரத்துறை அலுவலர்கள் கூட்டாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடையை மீறி விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு காவல் நிலையம் சரகத்திற்குட்பட்ட கடந்த ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரையுள்ள ஈரோடு நகர காவல்துறை, மற்றும் உணவு பாதுகாப்புத்துறையால் கைப்பற்றப்பட்ட 488 கிலோ, இரயில்வே காவல்துறையனரால் கைப்பற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்ட 22 கிலோ எடையுள்ள மொத்தம் 510 கிலோ தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஈரோடு மாநகராட்சி வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் மாவட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அழிப்புக் குழுவினரான நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை காவல்துறை, உள்ளாட்சித்துறை, பொது சுகாதாரத்துறை, வருவாய் துறை ஆகியோரின் முன்னிலையில் புகையிலைப்பொருட்கள் மீண்டும் பயன்படுத்த இயலாத வகையில் சேதப்படுத்தப்பட்டு 10 அடி ஆழம் குழிதோண்டிப் புதைத்து முற்றிலும் அழிக்கப்பட்டன.
தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் அழிப்பு நடவடிக்கையில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். வரலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், எம். முத்துகிஷ்ணன் மற்றும் மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் கலைச்செல்வி, துப்புரவு ஆய்வாளர் கோகுல், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரவிக்குமார் கலநது கொண்டனர்.



