நாகர்கோவில், டிச. 26-
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதியில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தொடர்ந்து நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கரன் மேற்பார்வையில் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் கோட்டார் கலைநகர் பகுதியைச் சேர்ந்த நண்டு சுதன் (33), அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஜோனாப் அலி (46)
என்பவர்களிடம் இருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ 250 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.



