மார்த்தாண்டம், மார். 16 –
திருவட்டாறு அருகே வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியை எல். மீனாம்பிகா தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கல்வியாளர் முனைவர் கமல. செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.
மேலும் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற சி.எஸ். ராஜன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



