திருச்சி, மார்ச் 28 –
திருச்சி மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகமங்கலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மணிகண்டன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


