நாகர்கோவில், ஜூலை 20 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆல் இந்தியா பியூட்டி அசோசியேஷன் சார்பில் அழகு கலை பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் வருகை தந்தனர். சினிமா நட்சத்திரங்களை அழகுபடுத்தும் கலைஞர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். அதேபோன்று ஆல் இந்தியா பியூட்டி அசோசியேஷன் சங்கத்தில் புதிதாக தேர்வான நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு தலைவர் மினி செய்தியாளிடம் கூறுகையில்: இந்த அழகு கலை பயிற்சியை பயில்வதற்கு உள்ளூரில் இருந்து சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு சென்று பயிற்சி கற்றுக் கொண்டு இருந்து வந்தனர். அதில் பல சிரமங்கள் இருந்தது அதனை எளிமைப்படுத்தும் வகையிலும் உள்ளூர்களில் அழகு கலைஞர்களின் வசதிகளுக்காக சிறந்து விளங்கும் பயிற்சியாளர்களை கொண்டு இந்த வகுப்பு நடைபெற்றது. உலகத்தரம் வாய்ந்த கலைஞர்களை அழைத்து வந்து குறைந்த கட்டணத்துடன் பயிற்சி அளித்து வருகிறோம்.
பெண்கள் தொழில்நுட்பத் துறையில் சம்பாதிப்பதை விட அழகுக்கலையில் வருவாயை அதிகம் ஈட்டி வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனியில் இருப்பவர்கள் கூட அந்த வேலையை விட்டு மேக்கப் கோட்ஸ் கற்று நிபுணத்துவம் ஆகிவிடுகின்றனர். கடந்த காலங்களில் அழகு கலை சான்றிதழ் வாங்க பல்வேறு சிரமங்கள் இருந்தது ஆனால் தற்போது உயர் கம்பெனிகளுடன் இணைந்து சான்றிதழ்களை தங்களின் சங்கத்தின் மூலமாக வழங்கி வருகிறோம். அதேபோன்று அழகு கலையை கற்றுக் கொள்ள அரசு மானியம் வாங்குகிறது. அது பல கலைஞர்களுக்கு தெரியாது.
அவர்களுக்கு அதன் மூலம் கிடைக்கக்கூடிய மானியத்தை பெற்றுக் கொடுக்கவும் இச்சங்க உதவி செய்து வருகிறது. மேலும் அனைத்து தர மக்களுக்கும் அழகுக் கலையை கற்றுக் கொடுப்பதும் ஏழை பணக்காரர் என்று இல்லாமல் அனைவருக்கும் ஒரே விதமான மதிப்பீட்டில் அழகு நிலையங்களை நடத்தி வருகிறோம். மேலும் அரசு அமைப்புசாரா துறையில் ஒன்றிணைந்து அழகுகலை கலைஞர்களுக்கு பணபலன்கள் கிடைக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பாராட்டு விழா நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட அழகு கலை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.



